ஃபர்ஸ்ட் லுக் பார்த்தாலே ஏதோ விஷயம் இருக்கும் போல தெரிகிறது…

அறிமுக இயக்குநர் விக்டர் இம்மானுவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘மரபு’. இது மரபுசார் பண்புகளை மறந்து அற்பமான விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம்.

எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி விடுகிறது.

இந்தப் படத்தில் அனுபவமுள்ள பிரபல தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளார். ஐம்பது சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதோடு, எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு, அதற்கான வேலைகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளன. இந்தப்படத்தை தியேட்டர், ஓ.டி.டி. என்று பல தளங்களில் வெளியிட முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

விக்டர் இப்படத்தில் கதாநாயகனாகவும், இலக்கியா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஆனந்த பாபு வில்லன் கதாபாத்திரமேற்றும், ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ கதாநாயகியின் அம்மா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

Leave a Response