பாசிடிவ் ரிசல்ட்! சொந்த செலவில் மீண்டும் ஒரு இந்தி படம்!!

ranjh

இந்தியில் ஆனந்த்.L.ராய் இயக்கத்தில் ராஞ்சனா என்ற படத்தில நடித்துள்ளார் தனுஷ். இது தனுசுக்கு முதல் இந்தி படம். இந்த படம் உலகமெங்கும் இன்று வெளியாகியது. வெளியான இரண்டே காட்சிகளில் இந்த படத்திற்கு பெரிய பாசிடிவ் ரிசல்ட். வட இந்தியாவை சேர்ந்த விமர்சகர்களும் தனுசை பாராட்டி தள்ளுகிறார்கள்.

இது தனுசுக்கு முதல் இந்தி படம் என்றபோதும், தனக்குத்தானே இந்தியில் டப்பிங் பேசியுள்ளார். இந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்தியில் படம் பெற்ற வெற்றி தமிழ் விநியோகஸ்தர்களை மக்ழ்ச்சியடைய வைத்துள்ளது. தமிழில் இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறார் அபிராமி ராமநாதன்.

இந்த படத்தின் வெற்றிக்கு முன்பே இந்த கூட்டணி அடுத்து ஒரு படத்திலும் இணைய திட்டமிட்டுள்ளது. ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல் ராயிடம் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கதை கேட்டுள்ளார் தனுஷ். இப்போது நடித்திருப்பது காதல் கதை. அடுத்து நடிக்கப்போவது சற்று ஆக்சன் கலந்த கதையாம். இந்த படம் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகிறது. 2014 தொடக்கத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. படத்தை தயாரிப்பது இயக்குனரும், நாயகன் தனுஷும் தான்.