சில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கும் அடுத்த படம் நெடுஞ்சாலை. மாலை பொழுதின் மயக்கத்திலே படத்தின் நாயகன் ஆரி, சுவதா நடிக்கும் நெடுஞ்சாலை படத்தினை ஆஜூ மற்றும் சௌந்தர்ராஜன் தயாரிக்கிறார்கள்.
எங்கேயும் எப்போதும் சத்யா இசையில் தயாராகும் இந்த படத்தின் வெள்ளோட்டம் அதாவது டீசர் சமீபத்தில் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. அதை ஐந்து லட்சம் பேர் பார்த்துள்ளனர். மற்றும் பேஸ்புக்கில் இருபத்தி ஐந்தாயிரம் பேர் விரும்பியுள்ளனர். இணையதளத்தின் மூலமாக மொத்தம் ஐம்பது லட்சம் பேர் டீசர்-ஐ பார்த்துள்ளனர்.