புது இயக்குனர்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்த விக்ரமன்!

Vikraman-ninaithadhu-yaro1

மரியாதை படத்திற்கு பின் இயக்குனர் விக்ரமன் புதுமுகங்களை வைத்து இயக்கும் படம் நினைத்தது யாரோ. வெளியீட்டுக்கு தயாராகியுள்ள இந்த படத்தை சமீபத்தில் பார்த்த படத்தின் தயாரிப்பாளர்கள் ரமேஷ் மற்றும் இமானுவேல் ஆகியோர் படம் நன்றாக இருக்கிறது என்று இயக்குனர் விக்ரமனை பாராட்டினர். அது மட்டுமல்லாமல் அடுத்து புதிய இயக்குனர்களுக்கு இனி தொடர்ந்து வாய்ப்பு தர ‘’நினைத்தது யாரோ’’ படம் எங்களுக்கு ஆணிவேராக அமைந்துள்ளது என்று கூறினர்.

அதோடு சசிதரன் இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் “வாராயோ வெண்ணிலாவே” படத்தை தயாரித்து கொண்டிருக்கின்றனர். அடுத்து இரண்டு புதிய இயக்குனர்களை வைத்து இரண்டு படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.