மீண்டும் திரைப்படமாகிறது ‘MS தோனி’யின் வாழ்க்கை வரலாறு..!

கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடிய திரைப்படம் ‘MS தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி’. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான அணித்தலைவரான தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கபட்ட இப்படத்தின், அடுத்த பாகமும் விரைவில் திரைப்படமாக இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தில், அதன் முதல் பாகத்தின் நாயகன் ‘சுசாந்த் சிங்’கே நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவர துவங்கியுள்ளது. முதல்பாகத்தில் தோனியின் வாழ்வில், 2011ம் ஆண்டு உலக கோப்பை வெற்றி வரை நிகழ்ந்த சம்பவங்கள் இடம் பெற்றிருந்த நிலையில், உருவாக இருக்கும் அடுத்த பாகத்தில் அதனை அடுத்து அவர் நிகழ்ந்தவை காட்சிபடுத்தபட இருக்கிறது.

இதனால் இப்பாகத்தில், அந்த காலகட்டத்தில் பேட்டிங்கில் சொதப்பியதால் தோனி சந்தித்த விமர்சனங்கள் இடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தலைவராக அவர் சிறப்பாக செயல்பட்டது குறித்த காட்சிகளும் இந்த பாகத்திற்கு மேலும் விறுவிறுப்பை கூட்ட இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இப்படத்தினை RSVP பில்ம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் நிலையில், இயக்குனர் யார் எனபது குறித்து இன்னும் முடிவு செய்யபடவில்லை. என்றாலும் படப்பிடிப்புகளை முடித்து அடுத்த ஆண்டிருக்குள் வெளியிட முடிவு செய்து இருப்பது உறுதியாகியுள்ளது.

Leave a Response