நடிகர் மன்சூர் அலிகான் கைது; 8 வழிச்சாலைக்கு எதிராக பேசியதுதான் காரணமாம்..!

நடிகர் மன்சூர் அலிகான், தமிழகத்தில் நிகழும் பல்வேறு விரும்பத்தகாத நிகழ்வுகளை கண்டித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அரசு அறிவித்துள்ள சேலம் 8 வழிசாலை திட்டத்திற்கு எதிராக பேசிய காரணத்திற்காக நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சேலம் 8 வழிசாலை திட்டம் அமைவதினால், பல்வேறு இயற்கை வளங்களும், பல ஏக்கர் விவசாய நிலங்களும் அழியும் என்ற காரணத்தினால் பல்வேறு சமூக நல ஆர்வலர்கள் இத்திட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இத்திட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது ஒரு சில அரசியல் வாதிகள், மணல் கொள்ளை நடத்த எதுவாக இருக்கும் என்ற காரணத்தினால் தான் எனவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இது குறித்து முன்னதாக கருத்து தெரிவித்து இருந்த நடிகர் மன்சூர் அலிகான், ‘இது முழுக்க முழுக்க கார்பரேட் கம்பெனிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டமே ஒழிய, இதில் சிறிதளவு பயன்கூட மக்களுக்கு இல்லை. இந்த 8 வழி சாலை அமைந்தால் 8 பேரை வெட்டிவிட்டு சிறைக்கு செல்வேன்’ என ஆவேசமாக பேசி இருந்தார்.

இதனால் அவர் மீது வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, நள்ளிரவில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Response