தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியானது: ஹைகோர்ட்..!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி சிபிஐ விசாரணை நடத்தலாம் என்று சென்னை ஹைகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பற்றி, சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதுபற்றி சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த கோரி வழக்கறிஞர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த வழக்கில் இந்திரா பானர்ஜி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போது மாநில அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது.

Leave a Response