தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னையில் காலை முதலே வெயில் வெளுத்து வருகிறது. அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் திடீர் திடீரென வெயில் சுட்டெரிக்கிறது.

இதனிடையே தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு முறை லேசான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Leave a Response