“புரூஸ் லீ” யின் பிம்பமாக வளர்ந்திருக்கும் புதிய புரூஸ் லீ..!

எஸ்.கே.அமான் பிலிம் புரொடகபஷன்ஸ் நிறுவனம் சார்பில் வந்தவாசி கே.அமான் தயாரிக்கும் படம் – புதிய புரூஸ் லீ.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முளையூர் ஏ.சோணை இயக்கியிருக்கிறார். நாயகன் புரூஸ் ஷானைப் பார்த்தபோது சின்னதாக அதிர்ச்சியும், வியப்பும். காரணம், புரூஸ் ஷான் அசப்பில் புரூஸ் லீயைப்போலவே இருந்தார்.

புதிய புரூஸ் லீ படம் குறித்து பேசிய இயக்குநர் முளையூர் ஏ.சோணை, “புரூஸ் லீயின் ரசிகனான எனக்கு அவரைப்போல சாயல் கொண்ட புரூஸ் ஷானை பார்த்ததும் இந்தப்படத்தை பண்ண வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது.

புரூஸ் ஷான் கராத்தேயில் இரண்டு பிளாக் பெல்ட் வாங்கியவர் என்று தெரிந்ததும் எனக்கு கூடுதல் பலமாக இருந்தது.

கிராமத்தில் இருக்கும் கதாநாயகன் ஒரு பாதிப்பில் தன் குடும்பத்தை இழக்கிறான். மன ஆறுதலுக்காக நகரத்தில் உள்ள தூரத்து உறவினரான மாமா வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறான்.அங்கு அவரது மாமா ஒரு இடப்பிரச்சினையில் சிக்கி இருப்பதை தெரிந்து அப்பிரச்சினையை தனது அடிதடியால் தீர்த்துவைத்துவிட்டு பின்னர் தனது ஊருக்கு திரும்புகிறான்.

கதையின் நாயகனாக ஷான் இருந்தாலும் எனக்கு நினைவில் இருந்ததெல்லாம் நான் நேசிக்கும் புரூஸ் லீதான். அவர் நடை உடை பாவனை அவர் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் அனைத்தையும் நான் ரசித்ததை எல்லாம் ஷானிடம் இருந்து வெளிக் கோண்டிரு வந்திருக்கிறேன். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் ஷான் செயல்படும் விதத்தை பார்த்தால், புரூஸ் லீயை பார்ப்பது போலவேதான் இருக்கும். இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் புரூஸ் லீயை மீண்டும் பார்த்த திருப்தி அடைவார்கள்.” என்றார்.

செளந்தர்யான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மூன்று பாடல்களையும் இயக்குநர் ஏ.சோணையே எழுதியிருக்கிறார்.

Leave a Response