ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இதனால் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.

காவிரி வாரியம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. எனவே வரும் மே 3-ஆம் தேதி நல்ல தீர்ப்பு வரும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதனிடையே காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலாலுடன் முதல்வர் எடப்பாடி சந்திக்கவுள்ளார். காவிரி விவகாரம் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Response