தமிழகத்தில் காவிரி போராட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: காவிரி போராட்டங்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு முழு கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தொடர்ந்து 3 நாட்கள் போராட்டம் நடைபெற்றால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்டு நீதிமன்றம் தானாக முன்வந்து தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. போராட்டங்களுக்கு எதிராக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற முறையீட்டை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Leave a Response