இளையராஜா மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்-மக்கள் நலக் கட்சித் தலைவர் சாம் ஏசுதாஸ்

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இசை அமைப்பாளர் இளையராஜா, இயேசுகிறிஸ்து பற்றி சில கருத்துக்களை கூறியிருந்தார். இது கிறிஸ்தவ மக்களிடையே வருத்தத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதை கண்டித்து இளையராஜா வீட்டு முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.இந்த நிலையில் சிறுபான்மை மக்கள் நலக் கட்சித் தலைவர் சாம் ஏசுதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்க நிகழ்ச்சியில் இளையராஜா இயேசுகிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றும் மீண்டும் பிறக்கவில்லை என்றும் பேசி தன் மதத்தை உயர்த்தி கூறி கிறிஸ்தவ மதத்தை கொச்சைப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் வருகிற 7ந் தேதி வள்ளுவர் கோட்டம் முன் பிரமாண்ட போராட்டம் நடத்துவோம். என்றார்.

Leave a Response