காவிரி மேலாண்மை வாரியம் : தமிழக அரசு ஆலோசித்தது என்ன?

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு, சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.

முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு, அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்தித்து அழுத்தம் தர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அனைத்துக்கட்சி கட்சி கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தை எட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அத்துடன் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Response