தி நகர் “சரவணா ஸ்டோரூக்கு” வெடிகுண்டு மிரட்டல்..!

ரங்கநாதன் தெருவில் உள்ளது சரவணா ஸ்டோர்ஸ். இங்கு எந்த நேரத்திலும் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏராளமானோர் துணி மணி வாங்குவது என ஷாப்பிங் செய்த வண்ணம் இருப்பர்.

இந்த தெருவும் எந்நேரமும் கூட்டநெரிசலாகவே இருக்கும். பண்டிகை காலங்களில் கேட்கவே வேண்டாம். ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்கு இன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது மறுமுனையில் பேசிய மர்மநபர் கடையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அவசர அவசரமாக பொருட்களை வாங்க வந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு கடையில் சோதனை நடத்தப்படுகிறது.

இதனால் அந்த தெருவில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Response