முதல்வருக்கு திருமண அழைப்பிதழை கொடுத்த ஜி.வி.!!

ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரும், பிரபல இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ்குமார், பாடகி சைந்தவியை கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே இருவரும் இதனை உறுதிபடுத்தினர். ஆனால் திருமணத்தை மட்டும் தள்ளிபோட்டுகொண்டே வந்தனர். இருவருமே பள்ளி நாட்களிலிருந்து நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

25 படங்களுக்கு இசையமைத்துள்ள ஜீ.வி.பிரகாஷ் குமார், இப்போது பெற்றோர் சம்மதத்துடன் வரும் ஜூன் 27-ம் தேதி சைந்தவியை திருமணம் செய்கிறார்.

திருமண ஏற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில், இதற்கான அழைப்பிதழை முதல்வருக்கு ஜி.வி.பிரகாஷ் குடும்பத்தினர் நேரில் சென்று கொடுத்தனர். ஜி.வி.பிரகாஷ், சைந்தவி மற்றும் இருவரின் பெற்றோரும் இணைந்து அழைப்பிதழ் கொடுத்தனர். புதுமணத் தம்பதிகளாகப் போகும் ஜிவி பிரகாஷையும் சைந்தவியையும் முதல்வர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.