எதிர்ப்பை மீறி கொடியேற்றினார் மோகன் பகவத்..

37ba26bcb99008a5fc043670b593d90a

கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள பள்ளி ஒன்றில் நடக்கும் குடியரசு தின விழாவில் ஆர்எஸ்எஸ் இயக்க தலைவர் மோகன் பகவத் கொடியேற்றுவார் என கூறப்பட்டிருந்தது.இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் காரணமாக பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் கல்வி அதிகாரிகள் மட்டுமே தேசிய கொடியினை ஏற்ற வேண்டும் என கேரள அரசு சார்பில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்நிலையில் கடும் எதிர்ப்பு மற்றும் மாநில அரசின் உத்தரவையும் மீறி பாலக்காடு பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் மோகன் பகவத் தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார்.

Leave a Response