கேபிள் ஷங்கர் இயக்கும் “கலகலப்பான” படம் ‘தொட்டால் தொடரும்’!

எப்.சி.எஸ் கிரியேசன்ஸ், துவார் சந்திரசேகர்  தயாரிக்கும் ஐந்தாவது படம் ‘தொட்டால் தொடரும்’! கேபிள் ஷங்கர் இயக்குகிறார்.

வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பாக்கணும் போல இருக்கு, இருவர் உள்ளம் போன்ற படங்களை தயாரித்துள்ள எப்.சி.எஸ் கிரியேசன்ஸ், துவார் சந்திரசேகர் அவர்கள் தயாரிக்கும் அடுத்த படம் தொட்டால் தொடரும்.  எழுத்துலகில் சிறந்த விமர்சகராக வலம் வரும்  கேபிள் ஷங்கர் இயக்குகிறார்.  கலகலப்பு, தில்லுமுல்லு படத்திற்கும் வசன உதவியாளராகவும், ஈகோ படத்தின் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர் கேபிள் ஷங்கர். தற்போது காதல் மற்றும் த்ரில்லர் கலந்த காமெடி  படத்தை இயக்கவுள்ளார்.

படத்திற்கு தொட்டால் தொடரும் என்று பெயரிட்டுள்ள  இயக்குனர் கேபிள் ஷங்கர் படம் பற்றி கூறியதாவது, ஒருதவறான விஷயத்தை தொடப்போய் அது விடாமல் எப்படி துரத்துகிறது என்பதை நகைச்சுவை உணர்வுடன் சொல்ல இருக்கிறோம். அதோடு மிக முக்கியமான நடிகர் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்.