அஜீத் 53 – ‘மே’யில் தலைப்பு! ஆகஸ்டில் படம்!!

அஜீத் – விஷ்ணுவர்தன் கூட்டணியில், ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் பெயரிடப்படாத க்ரைம் த்ரில்லர் படம் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜீத் உடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி பண்ணு நடித்துள்ள அந்த திரைப்படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை. படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

அஜித்தின் பிறந்தநாளன்று ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு நடந்தது. இப்போது கடைசி கட்ட படப்பிடிப்பு இமயமலைப் பகுதிகளில் லடாக் மற்றும் குலுமனாலி போன்ற இடங்களில் கடந்த இரு வாரங்களாக நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ள டெல்லியிலிருந்து காரை அஜித்தே ஓட்டிச் சென்றுள்ளார்.

டப்பிங், போஸ்ட் புரடெக்சன் போன்ற வேலைகள் முடிய மூன்று மாதங்கள் ஆகும் என்பதால் ஆகஸ்ட் 15ம் தேதியை தேர்ந்தெடுத்துள்ளனராம். இந்த மாத இறுதியில் படத்தின் தலைப்பும், வரும் ஆகஸ்டில் படமும் வெளியாகும் என்று தெரிகிறது.

கூடுதல் தகவல் : சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் புதிய படத்தின் ஹைதராபாத் ஷூட்டிங்கில், அஜீத் பிரியாணிக்கு பதில் பொங்கல் சமைத்து அனைவருக்கும் பரிமாறினாராம்.

Pic courtesy: STAR AJITH