விடுமுறை அறிவித்த பிறகும் மாணவர்கள் போராட்டம்.

AVDBUSFAREPROTEST-01

திருப்பரங்குன்றம், தமிழகத்தில் பஸ் கட்டணம் இருமடங்குக்கு மேல் திடீரென உயர்த்தப்பட்டது. இதனை கண்டித்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கினர்.

அவர்களுக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக மாணவ-மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தை முடக்கும்வகையில் தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

இருப்பினும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் இன்று வழக்கம்போல் கல்லூரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து பஸ் கட்டண உயர்வை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Response