யுவன் இசையில் பாடுவீர்களா? – ஏ.ஆர்.ரஹ்மான் பதில்!!

தனுஷ் – பார்வதி நடிப்பில் பரத்பாலா இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் மரியான். இந்த படத்தின் இசை நேற்று முன்தினம் வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே விற்பனையிலும், டவுன்லோடிலும் சாதனை படைத்தது. இதனை கொண்டாட இயக்குனர் பரத்பாலா, ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ், பார்வதி ஆகியோர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

பிரஸ் மீட்டில் நிருபர்களின் கேள்விகளுக்கு ரஹ்மான் பதிலளித்தார். “மரியான் படத்திற்கு ஒப்புகொண்டதன் காரணம் பாரத்பாலாவின் நட்புதான். இதற்காக கதையகூட கேட்கவில்லை. ஆப்பிரிக்காவில் ஷூட்டிங் என்றார். சரி என்றேன். இப்போது தான் காட்சிகளை பார்க்கிறேன். நன்றாக வந்துள்ளது. பாரத்பாலாவின் நட்பு எல்லை உலகளவில் பரந்து, விரிந்துள்ளது, அதுதான் அவரது படைப்புகளின் தரத்திற்கு சான்று” என்றார்.

யுவன் சங்கர் ராஜாவைப் பாட அழைத்தது பற்றி, அவர் கூறுகையில், “தனுஷ், யுவன் சங்கர் ராஜா மற்றும் செல்வராகவன் கூட்டணியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். மரியானில் வரும் கடல் ராசா நான் பாட்டை நான்தான் பாடினேன். ஆனால் தனுஷுக்கு அது செட் ஆகவில்லை. அப்போதுதான் யுவனை பாட அழைத்தேன். அந்தப் பாடலுக்கு அவர் குரல் மிகப் பொருத்தமாக அமைந்துவிட்டது,” என்றார்.

யுவன் சங்கர் ராஜா இசையில் நீங்கள் பாடுவீர்களா என்று கேட்டதற்கு “பாடும்போது பார்த்து கொள்ளலாம்” என்றார்.