அழகிய “க்ரைம் ரிப்போர்டர்” ஆண்ட்ரியா!!

பாடகியாக இருந்து நடிகையாக மாறி சில படங்களில் நடித்து விட்டார் ஆண்ட்ரியா. சமீபத்தில் அவர் நடித்து பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்து வெற்றி பெற்ற படம் “விஸ்வரூபம்”. ஆனாலும் அவரின் கேரக்டர் சொல்லிக் கொள்கிற அளவில் இல்லை. பாட்டுப் பாடத்தான் வாய்ப்புகள் வருகின்றன. தற்போது, அவர் நடிக்கிற ஒரேயொரு முக்கியமான படம் புதிய திருப்பங்கள் தான்.

சிருங்காரம் படத்தை இயக்கிய சாரதா ராமநாதன் இயக்கும் படம் புதிய திருப்பங்கள். உலகில் இரண்டாது பெ‌ரிய குற்றம் குழந்தை கடத்தல் தான். டிவியை ஆன் செய்தாலும், செய்தித்தாளை பி‌ரித்தாலும் குழந்தை கடத்தல்தான் கண்ணில்படுகிறது. ஒரு மணி நேரத்தில் ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக புள்ளி விவரம் கூறுகிறது. அதன் பின்னணி என்ன என்று ஆராய்ந்தபோது உருவானது தானாம் இந்த புதிய திருப்பங்கள். பெண் இயக்குனர் என்றாலும் துணிச்சலான சப்ஜெக்டை எடுத்திருக்கிறார்.

படத்தில் அமெ‌ரிக்க கனவுடன் இருக்கும் இளைஞனாக நந்தா நடித்திருக்கிறார். அவர்தான் படத்தின் ஹீரோ. மற்றொரு நாயகியாக “மூன்று பேர் மூன்று காதல்” சுர்வீன் சாவ்லா நடித்துள்ளார். “ஆண்ட்‌ரியாவுக்கு இதில் புலானாய்வு பத்தி‌ரிகையாளர் வேடம். கதையை கேட்டு உடனே நடிக்க வந்திட்டார். அவருக்கு இது ரொம்பவே முக்கியமான படமாக இருக்குமாம்.

ஆண்ட்‌ரியா இதுவரை புலனாய்வு பத்தி‌ரிகையாளராக நடித்ததில்லை. அவரது போர்ஷன் சிறப்பாக வந்திருப்பதாக சாரதா ராமநாதன் தெ‌ரிவித்துள்ளார். விரைவில் படம் வெளிவரவிருக்கிறது.