காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை கன்னியாகுமரி வருகை!

xrahul-gandhi-34-13-1513131045.jpg.pagespeed.ic.7p7j8WG3yL

ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை பார்வையிடுகிறார். அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. இதனால் அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட்டார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை கன்னியாகுமரி வர உள்ளார். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிடுகிறார். காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்பு முதல்முறையாக ராகுல்காந்தி நாளை தமிழகம் வரவுள்ளார்.

Leave a Response