குஜராத்தில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு! 

 

xgujarat-poll123-08-1512718050.jpg.pagespeed.ic.4M1onsryKY

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக நாளை 89 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குஜராத்தின் 182 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நாளையும் 14-ந் தேதியும் நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் டிசம்பர் 18-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. முதல் கட்டமாக நாளை 19 மாவட்டங்களின் 89 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

மொத்தம் 24,689 வாக்குச் சாவடிகள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. 2,12,31,652 கோடி வாக்காளர்கள் முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் ஆண்கள்- 1,11,05,933; பெண்கள்- 1,01,25,472; மூன்றாம் பாலினத்தவர்- 247. 2வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதில் 2,22,96,867 பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

Leave a Response