அன்புச்செழியன் மீது சசிக்குமார் புகார்! கொலை வழக்காக ஏற்க கோரிக்கை!

Untitled-13

இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனமாக கம்பெனி புரொடக்ஷ்ன் மேலாளராகவும், இணை தயாரிப்பாளராகவும் இருந்தவர் அசோக்குமார். சசிகுமாரின் அத்தை மகன், 45 வயதான அசோக்குமார் கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்திருப்பது தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அசோக்குமார் தற்கொலை வழக்கில் போலிசாரால் தேடபட்டு வரும்  அன்பு செழியனை பிடிக்க மூன்று தனிபடை அமைக்கபட்டுள்ளது, உதவி ஆய்வாளர் ஜெயராம் தலைமையிலான தனிபடை போலிசார் மதுரை விரைந்தனர்.

நேற்று இரவு சென்னையில் உள்ள அன்பு செழியன் அலுவலகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர் போலீசாரின் வருகையை தெரிந்து கொண்ட அவர் அங்கிருந்து தப்பி சென்று தலைமறை வாகியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சசிகுமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அசோக்குமாரை தற்கொலைக்கு தூண்டிய அன்புச்செழியன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

WhatsApp-Image-2017-11-22-at-2.00.36-PM-e1511341697332 WhatsApp-Image-2017-11-22-at-2.00.38-PM1-e1511341727230 WhatsApp-Image-2017-11-22-at-2.00.38-PM-e1511341763390 WhatsApp-Image-2017-11-22-at-2.00.39-PM-e1511341795172 WhatsApp-Image-2017-11-22-at-2.00.40-PM-e1511341821841 WhatsApp-Image-2017-11-22-at-2.00.41-PM-e1511341852679

Leave a Response