ஐடி ரெய்டு- இந்த பங்களா மட்டும் எப்படியோ தப்பிச்சத்து!

sasikaladinakaran

இன்று அதிகாலையிலிருந்து சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 190 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நிகழ்த்தி வருகின்றனர்.

 இந்த சோதனையில் ஜெயலலிதா ஓய்வெடுத்து வந்த கொடநாடு எஸ்டேட்டிலும் நடைபெறுகிறது. அதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்திலும் சோதனை நடைபெறுகிறது.

இந்நிலையில் சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் சோதனை நடைபெறவில்லை என கூறப்படுகிறது. சிறுதாவூர் பங்களா பல்வேறு சர்ச்சைகள், மர்மங்களை தன்னகத்தே கொண்டதாகம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த பங்களாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்டது. அப்போது பல முக்கிய ஆவணங்கள் எரிக்கப்பட்டதாக பேச்சு எழுந்தது.

pangkala

முன்பு இந்த பங்களாவிலிருந்துதான் ஏகப்பட்ட கண்டெய்னர்களில் பணம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு போகப்பட்டதாகவும் ஒரு மிகப் பெரிய சர்ச்சைக்குள்ளானதும் நினைவிருக்கலாம்.

Leave a Response