குமரியில் தொடரும் பலத்த மழை : வேகமாக நிரம்பும் நீர்நிலைகள்!

1509435600-9108

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கன்னியாக்குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாரமாக பெய்து வரும் மழையால் அங்குள்ள குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. குறிப்பாக குமரி மாவட்டத்தின் மலையோர கிராமங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஆனைகிடங்கு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, ஆறுகாணி, பத்துகாணி, குலசேகரம் இடங்களில் மழை கொட்டி தீர்க்கிறது. இதன் காரணமாக பழையாறு, குழித்துறை ஆறுகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சோழன்திட்டை தடுப்பு அணை, நாகர்கோவில் அருகே உள்ள குமரி அணைகளிலும் தொடர் மழை காரணமாக கணிசமான அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

pic

குமரி மாவட்டத்தில் சுமார் 2500 குளங்கள் உள்ளன. இவற்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பே 250 குளங்கள் முழுமையாக நிரம்பின. இந்நிலையில் தொடர் மழையால் மேலும் 600 குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளன. 740 குளங்கள் 50 சதவீதம் அளவுக்கு நிரம்பி குளங்களில் 25 சதவீதம் அளவுக்கு நீர் தேங்கியுள்ளது. மழை காரணமாக குமரி மாவட்டத்தில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ரப்பர் பால் வெட்டும் பணியும் முடங்கி உள்ளது. உப்பள தொழில், கட்டுமான தொழில் உள்ளிட்ட அன்றாட தொழில் பல முடங்கியுள்ளன.

Leave a Response