கிழக்குக் கடற்கரை சாலையை மையமாக கொண்டு உருவாகும் ஒரு திகில் படம்!

east 2
தமிழ் திரையுலகில் புதிதாக ஆடியன்ஸ் க்ளாப்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜெ.எம்.நூர்ஜஹான் என்ற பெண்
ஒருவர் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.

இவர் “கரிக்காட்டுக் குப்பம்” என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் அபிசரவணன், ஸ்வேதா உள்பட பலர் நடிக்கின்றனர்.

சென்னையில் மிகவும் ஆபத்தான கிழக்குக் கடற்கரை சாலையை பிண்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது.

சென்னையில் மிகவும் ஆபத்தான பகுதி என்று சொல்லப்படும் கிழக்குக் கடற்கரை சாலையில் அதிகளவு விபத்துக்கள், பலிகள் அதிகம் நடக்கிறது. இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்ட கதைகலத்தில் உருவாகும் படம்தான் இந்த “கரிக்காட்டுக் குப்பம்” .

இந்தப் படம் திகில் கலந்த சஸ்பென்ஸ் படமாக உருவாகிறது. நம் தமிழ் திரையுலகில் ஒரு பெண் இயக்குனர் திகில் படத்தை இயக்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிட தக்கது.

Leave a Response