2 அடிக்கு தேங்கி நிற்கும் மழை நீர்- போக்குவரத்து பாதிப்பு!

rain566-

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருவதால் அந்தப் பகுதியில் உள்ள சுமார் 98க்கும் மேற்பட்ட ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. இதனால் மீண்டும் மழை பெய்தால் ஏரியில் இருந்து நீரை வெளியேற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

velachery_mainnn
இந்நிலையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் 2 அடி அளவிற்கு மழைநீர் ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு. தெல்லிமேடு ஏரிக்கரை உடைந்ததால் 2 நாட்களாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது தென்மேலப்பாக்கம், சிங்கப்பெருமாள் கோயில் ஏரிகளும் நிரம்பி வழிவதால் சாலையை கடந்து ஓடும் நீர்மட்டம் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே இந்த சாலையை பயன்படுத்துவோர் எச்சரிக்கையோடு இருக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Response