பாகிஸ்தானில் லஸ்ஸி குடித்த 17 பேர் பலி! 10 பேர் கவலைக்கிடம்!

625.0.560.350.160.300.053.800.668.160.90

பாகிஸ்தானில் விஷம் கலந்த பாலில் லஸ்ஸி செய்து குடித்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் ஆசியா பீபி என்ற 21 வயது பெண்ணுக்கு சில நாட்களுக்கு முன் அஜ்மத் அக்ரம் என்ற 25 வயது வாலிபருடன் திருமணம் நடைபெற்றது. அஜ்மல் அந்த பெண்ணை தினமும் எதாவது காரணம் சொல்லி அடித்திருக்கிறார். மேலும் அவளது முன்னாள் காதலன் குறித்தும் கேள்விகள் கேட்டு கொடுமை படுத்தி இருக்கிறார். இதனால் கணவனை கொன்றுவிடலாம் என முடிவு செய்து இருக்கிறார். தனது முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவனை பாலில் விஷம் கலந்து கொன்றுவிடலாம் என முடிவு செய்து இருக்கிறார். இதற்காக அவளது காதலன் ஷாஹித் அப்பெண்ணுக்கு விஷம் வாங்கி கொடுத்து இருக்கிறார்.

இதை அந்தப் பெண் பாலில் கலந்து கணவனிடம் கொடுத்து கொலை செய்துவிடலாம் என முடிவு செய்து இருக்கிறார்கள். அவன் இறந்த பின் அங்கிருந்து ஓடிச்சென்று சேர்ந்து வாழலாம் எனவும் முடிவு செய்துள்ளனர். ஆசியா விஷம் கலந்து கொடுத்த பாலை அவரின் மாமியார் எடுத்து அதனுடன் இன்னும் கொஞ்சம் பால் சேர்ந்தது ‘ லஸ்ஸி’ செய்து அவர்கள் வீட்டில் இருந்த 27 பேருக்கும் கொடுத்து இருக்கிறார். இதை குடித்த 27 பெரும் உடனடியாக மயங்கி விழுந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தற்போது வரை மொத்தம் 17 பேர் மரணம் அடைந்துள்ளனர். மேலும் 10 பேர் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Response