‘திப்பு ஜெயந்தியை கொண்டாட வேண்டாம்’ கலெக்டரிடம் பாஜ ரத்த கையெழுத்து மனு!

37988-rxubzfxemu-1469095202

 

திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாவை கொண்டாட வேண்டாம் என்பதை வலியுறுத்தி மைசூரு கலெக்டர் அலுவலகத்தின் எதிரே பாஜக சார்பில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின்போது பாஜக நிர்வாகிகள் ரத்தத்தில் கையெழுத்து இட்டு அந்த கடிதத்தை மாவட்ட கலெக்டரிடம் அளித்தனர். இது குறித்து பாஜக நிர்வாகிகள் கூறியதாவது: “திப்பு சுல்தான் ஜெயந்தி, அரசின் சார்பில் நடைபெறக்கூடாது. கர்நாடக மாநிலத்தின் விரோதி திப்பு சுல்தான். அவரின் பிறந்தநாளை அரசின் சார்பில் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரத்த கையெழுத்து இட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். எங்களின் கோரிக்கையை மாநில அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

Leave a Response