2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு- நாளை தீர்ப்பு வருமா?

2g

கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு பிரச்சினை, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு. டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி இந்த வழக்கை விசாரித்தார்.

விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கு, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உள்ளிட்டோர் மீதான இந்த வழக்கின் தீர்ப்பு அரசியல் ரீதியாகவும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக எதிர்பார்க்கப்படுகிறது.

2g1

அக்டோபர் 25ம் தேதியன்று  தீர்ப்பு தேதி குறித்து அறிவிக்கப்படும் நீதிபதி ஷைனி கடந்த மாதம் தெரிவித்திருந்தார். எனவே நாளை இந்த அறிவிப்பு வெளியாகும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response