2015 தில் வரி ஏய்ப்பு செய்ததை உறுதிபடுத்தியது வருமானவரித்துறை!

vijay

 

மெர்சல் படம், பல்வேறு தடைகளை தாண்டி, தீபாவளிக்கு வெளியானது. அதன், கிளைமாக்ஸ் காட்சியில், ஏழு சதவீதம், ஜி.எஸ்.டி., வசூலிக்கும் சிங்கப்பூர் அரசு, பொதுமக்களுக்கு, இலவச மருத்துவ வசதி அளித்துள்ளது. ஆனால், இந்தியாவில், 28 சதவீத, ஜி.எஸ்.டி., வசூலித்தாலும், இலவச மருத்துவம் இல்லை என, விஜய் வசனம் பேசி உள்ளார். அதற்கு, பா.ஜ., தலைவர்கள், தமிழிசை, எச்.ராஜா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இது குறித்து, டுவிட்டர் வலைதளத்தில் கருத்து பதிவிட்ட, எச்.ராஜா, நடிகர் விஜய், வருமான வரி ஏய்ப்பு செய்தார் எனவும் குற்றஞ்சாட்டி இருந்தார்.

ஆனால், விஜய் முறையாக வருமான வரி செலுத்தி உள்ளார் என, அவரது தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், 2015ல், நடிகர் விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்தது உண்மை தான் என, வருமான வரித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.வரி ஏய்ப்புஇது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு அதிகாரிகள், நேற்று கூறியதாவது:

vijay_puli

நடிகர்கள், விஜய், சமந்தா மற்றும் நயன்தாரா உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட, திரைத் துறையினரின் வீடுகளில், 2015 அக்டோபரில், வருமான வரி சோதனை நடந்தது. அதில், 25 கோடி ரூபாய்க்கும் மேல், வரி ஏய்ப்பு செய்திருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக, நடிகர் விஜய், புலி படத்தில் நடித்ததற்காக பெற்ற சம்பளத்தில், ஐந்து கோடி ரூபாயை வருமான வரி கணக்கில் காட்டவில்லை. இது, சோதனையில் உறுதியானது.

அதை ஏற்ற விஜய், அதற்குரிய வருமான வரியை செலுத்தினார். வரி ஏய்ப்பு செய்த மற்றவர்களிடமும், வருமான வரி வசூலிக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

விஜய்க்கு கடைசி வாய்ப்புவருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வருமான வரி ஏய்ப்பு செய்தோர், அதற்குரிய வரி செலுத்திய பின், வரி ஏய்ப்பு தொகை மற்றும் அதற்கான வட்டியும் சேர்த்து, காம்பவுண்டிங் டேக்ஸ் எனப்படும், கூடுதல் வரி செலுத்த வேண்டும். 2015ல், விஜய் வீட்டில் சோதனை நடந்த போது, உங்கள் மீது, ஏன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடாது எனக் கேட்டு, நோட்டீஸ் அனுப்பினோம். பின், அவர், கூடுதல் வரி செலுத்துவதற்கான ஆவணத்தை, 2016 துவக்கத்தில் தாக்கல் செய்தார்.
IT_Office_11221

அந்த வரியை செலுத்தியதால், அவர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், காம்பவுண்டிங் டேக்ஸ் செலுத்திய ஒரு நபர், மீண்டும் வரி ஏய்ப்பு செய்தால், அவர்களை சிறைக்கு அனுப்ப, வழி வகை உண்டு. விஜய்க்கு கடைசி வாய்ப்பு, இளம் வயதிலேயே முடிந்து விட்டது. இனி, அவர், ஒருமுறை மீறினாலும், நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜெயலலிதாவும், வருமான வரி வழக்கில், காம்பவுண்டிங் டேக்ஸ் செலுத்தி உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Response