இன்று தொடங்குகிறது ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்; அரசுப் பணிகள் முடங்கும் அபாயம்!!

jactio jio

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இப்படியான கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ இன்று முதல் காலவரையரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தது.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோவின் ஒரு பிரிவினர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர்.

ஆனால் மற்றொரு ஜாக்டோ ஜியோ பிரிவினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். மொத்தம் உள்ள 27 சங்கங்களில் 6 சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

அதன்படி, இன்று மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும் நாளை மறியல் போராட்டமும் நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக அரசுப்பணிகள் முடங்கும் நிலை உருவாகி உள்ளது.

Leave a Response