சோனியாவின் பாதுகாவலர் திடீர் மாயம்…குடும்பத்தினர் போலீஸில் புகார்!

soniya
காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கு எஸ்பிஜி கமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இக்குழுவில் பணியாற்றி வரும் ராகேஷ்குமார் (31) திடீரென மாயமாகி உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.துவாரகாவில் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வரும் ராகேஷ், செப்டம்பர் 1 ம் தேதியன்று வழக்கம் போல் பணிக்கு வந்துள்ளார்.

செப்.,1 அன்று அவருக்கு விடுப்பு அளிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் எதற்காக பணிக்கு வந்தார் என தெரியவில்லை. சீருடையுடன் பணிக்கு வந்த ராகேஷ், தனது நண்பர்களை பார்த்து பேசி விட்டு, காலை 11 மணியளவில் வெளியே சென்றுள்ளார். மறுநாள் ஆகியும் அவர் வீடு திரும்பாததால், அவருக்கு பணி நேரம் நீட்டிக்கப்பட்டிருக்கலாம் என அவரது மனைவி நினைத்துள்ளார். தொடர்ந்து செப்., 3 அன்றும் ராகேசை மொபைல் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை.

தொலைத் தொடர்பு இல்லாத இடத்தில் பணியில் இருக்கலாம் என அவரது குடும்பத்தினர் அமைதியாக இருந்துள்ளனர். இருப்பினும் ராகேசை பற்றி தொடர்ந்து எந்த தகவலும் இல்லாததால் செப்.,3 அன்று, சோனியாவின் வீட்டிற்கே நேரடியாக சென்று ராகேசின் குடும்பத்தினர் விசாரித்துள்ளனர். அங்கு அவர் வராததை அறிந்து அதிர்ச்சி அடைந்த ராகேசின் குடும்பத்தினர், போலீசில் புகார் அளித்தள்ளனர்.

சோனியா வீட்டிற்கு பாதுகாப்பு பணிக்காக வந்த காவலர் மர்மமான முறையில் மாயமாகி இருப்பதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Leave a Response