பார்வையற்றோர் பள்ளி… 3 குழந்தைகள் பலாத்காரம்; பிரிட்டிஷ்காரர் கைது!

sex 2
டெல்லியில் கண் தெரியாத குழந்தைகளுக்கு நடத்தப்படும் பள்ளியில் மூன்று குழந்தைகளை பிரிட்டனை சேர்ந்த 54 வயதுடைய முர்ரே வார்டு பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பாலியல் ரீதியாக குழந்தைகளை துன்புறுத்தி உள்ளார் என போலீஸ் தெரிவித்து உள்ளது. பிரிட்டிஷ்காரர் லேப்டாப்பில் ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என போலீஸ் தெரிவித்து உள்ளது. முதல்கட்ட விசாரணையில் பிரிட்டிஷ் நாட்டவர் குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து உள்ளார் என தெரியவந்துள்ளது என போலீஸ் கமிஷ்னர் பிஸ்வால் கூறிஉள்ளார்.

முர்ரேவின் செல்போனை ஆய்வு செய்து வருவதாகவும் போலீஸ் தெரிவித்து உள்ளது. கண் பார்வையற்றவர்களுக்கான அமைப்பில் கடந்த ஒன்பது வருடமாக முதியவர் முர்ரே வார்டு ஒரு நன்கொடையளிப்பவராக உள்ளார் எனவும் தெரிகிறது. அமைப்பின் அலுவலகத்திற்கு அடிக்கடி வந்து செல்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முர்ரே வார்டு பிரிட்டனின் க்ளாஸ்டர்ஷியர் பகுதியை சேர்ந்தவர். குர்கானில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் வரையில் பணியாற்றி உள்ளார். கடந்த பிப்ரவரியில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை அழிக்கப்பட்டு வருகிறார் என போலீஸ் தெரிவித்து உள்ளது. பள்ளியில் பணிபுரிந்த ஒருவர் கொடுத்த தகவலின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Leave a Response