விஜய் சேதுபதி நடிப்பில் உருவான படம் புரியாத புதிர். இந்த படம் நாளை ரிலீஸாகவிருந்தது.
இந்த நிலையில் படத்தை வெளியிட தடை விதித்து சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது!
திரைப்பட தொழிலாளர்களுக்கான சம்பள பாக்கி 22.13 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளதால் படத்துக்கு தடை விதிக்க கோரி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் வழக்கு தொடர்ந்திருந்தது.
அந்த வழக்கில்தான் மேற்கண்ட தீர்ப்பு வந்துள்ளது!