மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் செயலாளராக சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜீவ் கௌபா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய உள்துறை செயலாளராக இன்றே பதவியேற்கிறார் ராஜீவ் கௌபா. ஏற்கனவே உள்துறை செயலாளராக இருந்த மெஹரிஷியின் பதவி காலம் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து புதிய உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார் ராஜீவ் கௌபா.