தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்துள்ள நிலையில் அவரை சந்திக்க டிராபிக் ராமசாமி நேரம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிசாமி அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்யாவிட்டால் கட்டட உச்சியில் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் எனவும் மிரட்டல் விடுத்து வருகிறார். இதனால் சென்னை பாரிமுனை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.