கொட்டும் மழையில் விநாயகர் சதுர்த்தி!

rain with people01

பிள்ளையார் சதுர்த்தி எனும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவைக் கொண்டாட நேற்றிலிருந்தே மக்கள் ஆயத்தமாகினர்.

ஆனால் நேற்று இரவு முதல் சென்னையில் லேசாகவும் மிதமாகவும் பெய்யத் தொடங்கிய மழை விடிய விடிய பெய்து கொண்டே உள்ளது.

vinayakar

மழை காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சுணங்கியுள்ளது. களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகள் விற்பனையும் மந்தமாக உள்ளது.

ஆனால் இந்தக் கொண்டாட்டத்தை விட மழை முக்கியம் என்பதால், மக்கள் யாரும் வருத்தப்படவில்லை.

வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட உள்ளன.

Leave a Response