தனி ஒருவனாக எடுத்த படம்!

one

‘வெங்காயம்’ திரைப்படம் சினிமா மரபுகளை தாண்டி முழுக்க முழுக்க கிராமத்து மக்களையே நடிக்க வைத்து எடுக்கப்பட்டு பெறும் வரவேற்பை பெற்றது. இப்போது அந்த படத்தின் இயக்குனர் சங்ககிரி ராஜகுமார் “ஒன்” என்ற திரைப்படத்தை தனி ஒருவனாக அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து, அனைத்து தொழில்நுட்பங்களையும் அவராகவே பணியாற்றி, இப்படத்தினை இயக்கி தானே தயாரித்துள்ளார்.

இப்படத்தை பற்றி அவர் தன்னுடைய பத்திரிகை அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “அந்த படத்தின் இயக்குநர் “ஒன்” என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளேன். ஒற்றை மனிதனால் யாருடைய உதவியையும் சிறிதும் பயன்படுத்திக்கொள்ளாமல் தனி மனிதனாக ஒரு படத்தை எடுத்து முடிக்க முடியுமா? என்ற கேள்விக்கு “முடியும்”என்று இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறேன்.

சினிமாவின் அத்தனை துறை வேலைகளையும் தனியொரு மனிதனாக தானே செய்து இந்த படத்தை முடித்திருக்கிறேன்.

இதற்காக ஒகேனக்கல்,தலக்கோணம்,போன்ற அடர்ந்த காடுகளிலும்,இமயமலை பனிப்பிரதேசங்களிலும் தனியாக தங்கியிருந்து படப்பிடிப்பு செய்தேன்.இதன் கிளைமேக்ஸ் காட்சியை அமெரிக்காவில் எடுத்து முடித்தேன்.

ஒரே நபரால் எடுக்கப்பட்ட படம் என்றாலும் நிறைய கதாபாத்திரங்கள் படத்தில் உண்டு.அனைத்து கதாபாத்திரங்களிலும் நானே வெவ்வேறு தோற்றங்களில் நடித்திருக்கிறேன்.வயதான தோற்றம் உட்பட சில கதாபாத்திரங்களை மோசன் கேப்சர் முறையில் செய்திருக்கிறேன்.

3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டு, தனியாகவே அனைத்து வேலைகளையும் செய்ய நேர்ந்ததால் ஏற்பட்ட சிக்கல்களால் 4 ஆண்டுகள் ஆனது.எனினும் இந்தியாவிலே முதல் முயற்ச்சியாக இப்படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்திருப்பது பெரும் மன நிறைவை தருகிறது.

அதை நிரூபிக்கும் வகையில்,நான் வேலை செய்த அனைத்தையும் தொடக்கம் முதல் இறுதி வரை மற்றொரு மேக்கிங் கேமராவில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

தமிழக அளவில் “வெங்காயம்” படம் முன்னுதாரணமாக அமைந்ததை போல இந்திய அளவில் இந்த படம் பல இண்டிபெண்டண்ட் ப்லிம் மேக்கர்கள் உருவாக தூண்டுகோலாக அமையும் என நம்புகிறேன்.

இந்த முயற்சிக்கான நோக்கம்,வெங்காயம் படத்தில் மக்களை ஏமாற்றும் சாமியார்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியது போல,இந்த படத்திலும் மக்களுக்கு தேவையான முக்கியமான ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.

இதைப்போல வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்ட படங்கள் மக்களை எளிமையாக சென்றடைகிறது.ஆகவே 4 ஆண்டு கடுமையான உழைப்பிற்கு பிறகு இப்படம் பெரும் நிறைவாக வந்திருக்கிறது. விரைவில் திரையிட திட்டமிட்டிருக்கிறேன்.” என தன்னுடைய பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Response