மதுரை மாவட்டம் சமயநல்லுரை சேர்ந்தவர் வாசுதேவன் அவர் பி.ஏ பட்டம் பெற்றுள்ளார். சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த அவர் மறைந்த இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘வாழ்க்கை சக்கரம்’ படம் முலம் அவரது வாழ்க்கை திசை திரும்பியது. அதன் பிறகு சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
‘அமைதிப்படை’ படத்தில் சத்யராஜிற்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் கேரக்டரில் நடித்து, அதன்மூலம் அல்வா வாசு எனப் பிரபலமானவர் நடிகர் வாசு.
இவர், வடிவேலுவுடன் சேர்ந்து பல படங்களில் காமெடி செய்து நம்மை சிரிக்கவைத்தவர். தமிழில் 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானர்.
கடந்த ஆறு மாதங்களாக, கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்றுவந்தார்.
தற்ப்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளார் என மருத்துவமனை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.