அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது தினகரன் கடும் ஆவேசம்!

ttv-dinakaran-pti

சென்னை பெரிய மேடு அல்லி குளம் வளாகத்தில் உள்ள எழும்பூர் கோர்ட்டில் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தினகரன் இன்று ஆஜரானார்.

அப்போது நிருபர்களுக்கு திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் ஜெயக்குமார், உங்களை பற்றி கூறியுள்ள விமர்சனங்களுக்கு உங்கள் என்று கேள்வி எழுப்பினர்.

sinivasan

தினகரன் கூறியு பதில்:-

யார் திருடன் என்பது அனைவருக்குமே தெரியும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. தற்போது அவர் வனத்துறை அமைச்சராக உள்ளார். அவர் எங்கிருந்தார்? எப்படி இருந்தார் என்பது கட்சியினருக்கு தெரியும்.

திண்டுக்கல் சீனிவாசனுக்கு வயதாகி விட்டது. அதனால் அமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ள நினைக்கிறார். மீண்டும் தேர்தல் வந்தால் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா? என்கிற பயமும் அவருக்கு உள்ளது.

சசிகலாவின் காலில் விழுந்துதான் பொருளாளர் பதவியை அவர் பெற்றுள்ளார். அந்த பதவியை அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். காலில் விழுந்த படத்தை வெளியிட்டால் வயதில் பெரியவரான அவருக்கு தான் அசிங்கம். இனி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சீனிவாசன் பேச வேண்டும்.

1jayakumar

ஜெயக்குமார் அரசியலில் எப்படி இருந்தார் என்பது உங்களுக்கு தெரியும். சசிகலாவிடம் மன்றாடி நிதி அமைச்சர் பதவியை பெற்றவர் அவர். ஆர்.கே.நகர் தேர்தலில் எனக்கு ஆதரவாக பிரசாரம் செய்தவர்தான் இந்த ஜெயக்குமார். அதனை யாரும் மறந்து விடவில்லை. ஜெயக்குமார் கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னை பார்த்தால் எட்டப்பன் யார் என்பது தெரியும்.

Leave a Response