உலக தடகளப்போட்டி, தென் ஆப்பிரிக்க வீராங்கனைக்கு தங்கப் பதக்கம்!

semanya

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் நேற்று முன்தினம், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க வீராங்கனையான செமன்யா, பந்தய தூரத்தை 1 நிமிடம் 55.1 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இவர் ஏற்கெனவே இப்பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் புரூண்டி நாட்டு வீராங்கனையான பிரான்சின் நியோன்சாபா 1 நிமிடம் 55.92 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

அமெரிக்க வீராங்கனையான அஜி வில்சன் இப்பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அவர் பந்தய தூரத்தை 1 நிமிடம் 56.65 விநாடிகளில் கடந்தார்.

Leave a Response