தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது!

police444-15-1502737613
சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சென்னை கூடுதல் கமிஷனர் சேஷசாயி, ஏ.எஸ்.பி. ராஜா ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த சேவைக்காக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் மற்றும் கூடுதல் கமிஷனர் சேஷசாயி, ஏ.எஸ்.பி. ராஜா ஆகியோருக்கும் ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உட்பட மொத்தம் 26 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களின்போது சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

நாடெங்கும் சுதந்திர தினம் இன்று கொண்டாடவுள்ள நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதக்கங்கள் வழங்கவுள்ளார்.

Leave a Response