எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி மேலூரில் தினகரன் தலைமையில் இன்று பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டம் தினகரனுக்கு கட்சியில் உள்ள பலத்தை நிரூபிப்பதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது! தவிர, இந்தக் கூட்டத்தில் தினகரன் பல தடாலடி அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன!
இந்த கூட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை. அதை தொடர்ந்து தினகரன் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்று இந்த கூட்டத்தை நடத்துகிறார்.
கூட்டத்தில் எத்தனை எம்.எல்.ஏக்கள் பங்கேற்பார்கள்? இதனால் எடப்பாடி ஆட்சிக்கு ஆபத்து வருமா? என்றெல்லாம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது!