கடந்த 5 ஆம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றிபெற்றார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சி வரும் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இப்போது பதவியில் உள்ள துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள், சில மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளவிருக்கிற பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்வார் என தெரிகிறது!