பென்சிலால் அப்துல் கலாம்  ஓவியம் வரைந்து அசத்திய மாணவர்கள் !

abdul
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு பென்சிலால் அப்துல் கலாம்  ஓவியம் வரைந்து   அசத்திய மாணவர்கள்

தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு   ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகள் நடைபெற்றது.மாணவர்கள் பென்சிலால் அப்துல்கலாம் ஓவியத்தை வரைந்து அசத்தினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர்  லெ .சொக்கலிங்கம் தலைமையில் இந்த போட்டிகள் நடைபெற்றன.ஆசிரியர் ஸ்ரீதர் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

Leave a Response