இலவச ஜியோ மொபைலை பெற ஈசியான வழி !

jio
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ போன் என்ற புதிய பேசிக் மொபைலை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், வழக்கமான பேசிக் மொபைல்கள் போல இல்லாமல் குரல் மூலம் இயக்கும் வசதி, எமர்ஜென்சி கால் வசதி போன்றவையும் உள்ளன.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த மொபைல் அறிமுகம் செய்யப்பட்டது. இது முழுக்க முழுக்க இந்தியர்களால் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மொபைல் ஆகும்.

இந்த மொபைல் ரூ.0 விலையில், அதாவது இலவசமாக, கிடைக்கும் என்றும் வைப்புத் தொகையாக ரூ.1500 முதலில் செலுத்திவிட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் மொபைலை திருப்பிக்கொடுத்து முழு தொகையையும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த மொபைல் செப்டம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வரும். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். முன்பாக, இந்த மொபைலை புக் செய்ய முடியும். முன்பதிவு வரும் ஆகஸ்ட் 24 முதல் தொடங்குகிறது.

ஜியோ கடைகளில் நேரில் சென்றும் புக் செய்யலாம். அல்லது மொபைல் போனில் மை ஜியோ அப்ளிகேஷன் வாயிலாகவும் புக் செய்யலாம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Response