டிஎன்பில் இன்று தொடக்கம்! சிக்சர் அடிக்கும் போட்டியில் சிஎஸ்கே !

tnpl

டிஎன்பிஎல் (தமிழ்நாடு பிரிமியர் லீக்) கிரிக்கெட் தொடர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் முறையாக நடைபெற்றது. இரண்டாவது ஆண்டாக இன்று தொடங்கும் இத்தொடர் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இத்தொடரில், தூத்துக்குடி, சென்னை, திண்டுக்கல், கோவை, காரைக்குடி, திருவள்ளூர், திருச்சி, மதுரை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் லீக் சுற்றில் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாட வேண்டும். அதில் அதிக புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் ‘பிளே ஆப்’ முன்னேறும்.

முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மோதும்.

அடுத்து நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்த அணிகள் விளையாடும்.

ஆகஸ்ட் 16ஆம் தேதி நடக்கும் இப்போட்டியில் வெல்லும் அணி முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் தோற்ற அணியுடன் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

ஆகஸ்ட் 18ஆம் தேதி நடக்கும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் வெல்லும் அணி முதல் தகுதிச்சுற்றில் வென்ற அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும்.

இறுதிப்போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும்.

csk
தொடக்க நாளான இன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை சிக்ஸ் அடிக்கும் போட்டி நடத்தப்படும். இதில் மகேந்திர சிங் தோனி உட்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

Leave a Response