சசிகலா விவகாரத்தை திசை திருப்ப எம்.எல்.ஏ க்களுக்கு சம்பள உயர்வு?

satt
சசிகலா சிறைச்சாலையில் சொகுசாக வாழ்வதற்காக கோடிக்கணக்கில் பணம் கொடுத்ததாக சில தினங்கள் முன் செய்திகள் வந்தது. அதைத் தொடர்ந்து அவர் ஜெயிலில் சொகுசாக வாழ்வதற்கான ஆதார வீடியோக்கள் மீடியாக்களிலும் வாட்சப்பிலுமாக வந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சசிகலா மீது எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை துவங்கியுள்ளது என்றும் அவர் வேறு சிறைக்கு மாற்றப்பட வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. இத்தகையை சூழலில் சசிகலா விவகாரம் குறித்த பரபரப்பிலிருந்து எல்லோரையும் திசை திருப்புவதற்காகவே இந்த சம்பள உயர்வு அறிவிப்பை இப்போது வெளியிட்டிருக்கிறார்களோ என அரசியல் பார்வையாளர்கள், விமர்சகர்கள் மத்தியில் பேச்சு எழுந்திருக்கிறது!

தவிர, ‘விவசாயிகள் பிரச்னைக்கு இதுவரை எந்த தீர்வும் எடுக்கப்படவில்லை, கடந்த ஓராண்டில் இந்த அரசாங்கங்கள் செயல்பட்டதாகவே தெரியவில்லை. இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு அவசியமா?’ என பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக் குரல் கிளம்பத் தொடங்கி விட்டது. அப்புறமென்ன, இந்த மேட்டர் இன்னும் சில தினங்களுக்கு ஓடும். சசிகலா விவகாரம் தற்காலிகமாக மறக்கப்படலாம்!

Leave a Response